×

திருநெல்வேலியை சேர்ந்தவர் கிரிவலம் வந்த பெண் பக்தர் சாவு

திருவண்ணாமலை,ஜன.22: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி நகரை சேர்ந்தவர் ராஜம்பாள்(60). இவர் நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக வந்தார். திருவண்ணாமலைக்கு வந்த இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜம்பாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜம்மாளின் மகள் பாக்கியலட்சுமிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து திருவண்ணாமலைக்கு வந்த ராஜம்மாளின் மகள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ராஜம்மாள் சடலத்தை ஒப்படைத்தனர். ேமலும் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : woman devotee ,Thirunelveli ,Giri ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...