×

உடுமலையில் பதிவு எண் எழுதாமல் இயங்கும் வாகனங்கள் அதிகரிப்பு

உடுமலை, ஜன. 18: உடுமலை நகரில் சமீப காலமாக பதிவு எண் எழுதப்படாமல் வாகனங்கள் இயக்கப்படுவது அதிகரித்துள்ளது.உடுமலை நகரில் நாளுக்குநாள் வாகன  பெருக்கம் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர  வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுகின்றன. புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு வாரத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் வழங்கப்படுகிறது. விதிமுறைப்படி, பதிவு எண் கிடைக்கும் வரை வாகனங்களை இயக்க கூடாது. எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்க நேரிட்டால் காப்பீடு உள்ளிட்ட இதர பலன்கள் எதுவும் கிடைக்காது. நம்பர் இல்லாததால் வழக்கு பதிவும் செய்ய முடியாது.ஆனால் உடுமலை நகரில் வாகன ஷோரூம்களில் இருந்து வாங்கி வரப்படும் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக பதிவு எண் கிடைப்பதற்குள்ளாக சாலைகளில் இயக்கப்படுகிறது. பதிவு எண் கிடைத்தால் கூட அதை முறைப்படி, போர்டில் எழுதாமல் காலம் தாழ்த்துகின்றனர். இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. இதை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Udumalai ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்