×

மருமகளுடன் சண்டை - மாமியார் திடீர் சாவு

கிருஷ்ணகிரி, ஜன.18: கிருஷ்ணகிரி அருகே மருமகளுடனான சண்டையில் மாமியார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை, பெத்தமேலுபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சிங். இவரது மனைவி அனுசுயா பாய்(55). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து  வந்தார். நேற்று முன்தினம், அனுசுயா பாய் மற்றும் அவரது மருமகளுக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென அனுசுயா மயங்கி விழுந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்ைசக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அனுசுயா பாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மகாராஜகடை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : daughter-in-law ,death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...