×

காரிமங்கலம், பாலக்கோட்டில் நடந்த விபத்துக்களில் 3 பேர் பலி

காரிமங்கலம், ஜன.18:  காரிமங்கலம் அருகே இருவேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியாகினர்.காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளியை சேர்ந்த விவசாயி துரை(55). இவர் தனது மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுக்க பைக்கில் சென்றுள்ளார். பின்னர், தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தெல்லனஅள்ளி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, எதிரே வந்த பைக் துரையின் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல் பாலக்கோடு அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், தனது நண்பர்கள் நந்தகுமார், சபரிநாதன் ஆகியோருடன் டூவீலரில் காவேரிப்பட்டணத்தில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எலுமிச்சனஅள்ளி அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில்,  சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நந்தகுமார், சபரிநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சபரிநாதனும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Karimangalam ,accident ,Palakkad ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை