×

அரசு பஸ் மோதி முதியவர் பலி

தேவதானப்பட்டி, ஜன. 18: தேவதானப்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் முனியாண்டி(70). இவர் நல்லகருப்பன்பட்டி தனியார் கல்லூரி எதிரே உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வந்தார். நேற்று பெரியகுளத்தில் இருந்து டூவீலரில் சமத்துவபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரத்திற்கு சாலையை கடக்கும்போது, திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முனியாண்டி பலியானார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...