×

ஆண்டிபட்டி அருகே சமுதாயக்கூடத்திற்கு செல்லும் சாலை பணி தீவிரம்

ஆண்டிபட்டி, ஜன.18: தினகரன் செய்தி எதிரொலியால், ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியில் உள்ள கிராமத்தில் மயானம், சமுதாயக் கூடத்திற்கு செல்லும் மெட்டல் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சியில் கொப்பையம்பட்டி கிராமம் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொப்பையம்பட்டியில் உள்ள சமுதாய கூடம் தெரு, மயானத்திற்கு செல்லும் தெருக்களில் மெட்டல் சாலை அமைக்கும்
பணி துவங்கியது. ஆனால், வேலை ஆரம்பித்த சில நாட்களிலேயே வேலைகளை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.இதனால் சமுதாயக் கூடங்களில் ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதி அடைந்து வந்தனர். குறிப்பாக, ஊரில் இறப்பவர்களை மெட்டல் சாலை வழியாக கொண்டு செல்லும்போது பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி பிரேதங்களை தூக்கிச் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
இதுகுறித்த செய்தி தினகரனில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில், மயானம் மற்றும் சமுதாயக் கூடம் செல்லும் மெட்டல் சாலை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

Tags : road ,community camp ,Adipatti ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...