×

தொலைந்து விட்டாலும் இனி கவலையில்லை 50 கட்டணத்தில் புதிய ஆதார் அட்டை பெறும் வசதி விரைவில் தொடக்கம் யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை

வேலூர், ஜன.18: ஆதார் அட்டை தொலைந்தால் புதிய அசல் ஆதார் அட்டையை ₹50 கட்டணத்தில் பெறும் வசதியை விரைவில் யுஐடிஏஐ நிறுவனம் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சமூக நல திட்டங்களை உண்மையான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கவும், நாட்டின் குடிமகனுக்கான அடையாளமாகவும் கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் யுஐடிஏஐ மேற்கொண்டு வருகிறது.நாடு முழுவதும் இதுவரை 92 கோடி பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 90 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு அட்டைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி 308 அரசு இ சேவை மையங்கள், 1400 வங்கி கிளைகள், 1500 அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் சேவை மையங்கள் ஆகியவற்றில் உள்ளன.

இந்நிலையில், ஆதார் அட்டை அழுக்காகியும், சேதமடைந்தும், தொலைந்தும் போனால் அதற்கு மாற்று ஏற்பாடு என்பது சமீப காலம் வரை ஆதார் பதிவு மையங்கள் ஏடிஎம் கார்டை போன்றே பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் இச்சேவை நிறுத்தப்பட்டது.அதேநேரத்தில் ஆதார் எண்ணை வைத்தும், ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்களை கொண்டு இ சேவை மையங்கள் உட்பட மேற்கண்ட மையங்களில் பேப்பர் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது. இந்நிலையில், ஆதார் அட்டை தொலைத்தவர்கள், முற்றிலும் பழுதான அட்டை, அழுக்கான அட்டைக்கு பதில் நீளமான அசல் ஆதார் அட்டை வழங்கும் புதிய சேவையை சோதனை திட்டமாக யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஆதார் சேவை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (pilot Basis) என்ற பகுதியில் நுழைந்து புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ₹50 கட்டணமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.அதன் பின்னர் விரைவு தபால் மூலம் ஆதார் அட்டை நமது வீட்டுக்கு வந்துவிடும். இது மாதிரி திட்டம்தான். இதில் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட்டு நிரந்தர சேவைக்கு உறுதி அளிக்கப்படும்’ என்றனர்.

Tags : UIDAI ,
× RELATED ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக...