×

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம் விநியோகம்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாடபுத்தகங்கள் விநியோகத்தை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாடபுத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்களை வழங்கினார். இதே போல், மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 96,016 மாணவ, மாணவிகளுக்கும், 1466 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 73,473 பேருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags : government school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட,...