×

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

செந்துறை, ஜன. 11: செந்துறை கல்வி மாவட்ட அளவில் தேர்தல் சார்ந்த விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நடந்தது.     செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான, தேர்தல் சார்ந்த விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை வகித்தார். இதில் 15 உயர்நிலை,  மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 3 பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசு வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ராசய்யா, வட்டார வளமைய அலுவலர் குணசேகரன், செந்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் படைகாத்து நன்றி கூறினார்.


Tags : school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்