×

இலவச மோட்டார் தையல் இயந்திரம் மாற்றுதிறனாளிகளுக்கு அழைப்பு

கரூர்,ஜன.11: கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 2018-19ம் ஆண்டு நிதியாண்டிற்கான இலவச மோட்டார் பொறுத்திய தையல் எந்திரம் கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி களுக்கு நேர்முக தேர்வு நடத்தி பின்னர் வழங்கப்படவுள்ளது.புதிய ஆணையின் படி, 40சதவீத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகக்கும், 75 சதவீதம் மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாயாரும் இதில் பயனடைய தகுதி படைத்தவர். எனவே, தகுதி படைத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.18வயது முதல் 45வயதுடையவராக இருக்க வேண்டும். தையல் தேர்ச்சி சான்று நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயது சான்று நகல், 2 புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : motor tailoring machine call ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்