×

கடமலைக்குண்டில் ரேஷன் கடையை கண்டித்து மறியல்

வருசநாடு, ஜன. 11: கடமலைக்குண்டு கிராமத்தில் பொங்கல் பரிசு கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் சுமார் 46 ரேஷன் கடை உள்ளன. இக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 1000 மற்றும் சர்க்கரை, கரும்பு, பச்சரிசி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் நேற்று 50 சதவிதம் பேருக்கு மட்டுமே பொருள் மற்றும் பரிசுப்பணம் வழங்கப்பட்டது. இதனால் கடையை முற்றுகையிட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா