×

திருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.10: திருச்சியில் நாளை நடக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் உரிய சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் படத்துடன் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயதுடைய இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : job camp ,Tiruchi ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு