×

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

திருச்சி, ஜன.10: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர்கள் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம், வயது வரம்பு இல்லை. பயனாளி எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முறையாக சேர்ந்து பயில்பவராக இருக்கக்கூடாது.

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. எனவே, தகுதியான பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்களை சமர்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்’ என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...