×

டூவீலர் மோதி ெதாழிலாளி பலி

உத்தமபாளையம், ஜன.10: கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் சௌந்தராஜன் மகன் சுரேஷ்(34). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் கம்பத்தில் கட்டிட வேலைக்கு ெசன்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கம்பம் - பாளையம் நெடுஞ்சாலையில் வந்தபோது அந்த வழியே வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் சுரேஷ் மற்றும் டூவீலர் ஓட்டி வந்த கம்பத்தை சேர்ந்த வக்கீல் பிரபாகரன் படுகாயமடைந்தனர். இருவருக்கும் முதலுதவி கம்பம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்தார். சம்பவம் பற்றிய புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Tuweiler ,employer ,
× RELATED முதலாளி ரூ.2 லட்சம் தராததால் டிரைவரை கடத்தி சரமாரி தாக்குதல்