×

டிரம் மூலம் நீர் இறைத்து பாய்ச்சும் விவசாயிகள் திமுக ஊராட்சி சபை கூட்டதில் புகார் உசிலம்பட்டி, எழுமலையில் மத்திய அரசைக் கண்டித்து மறியல்

உசிலம்பட்டி, ஜன. 10: உசிலம்பட்டி, எழுமலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தில் 14 பெண்கள் உள்பட 171 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ. தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், உசிலம்பட்டியில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலுக்கு மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, ஒன்றியச் செயலாளர் ராமர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி சங்க நிர்வாகி அறிவு தலைமை வகித்தனர். இது தொடர்பாக, 12 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல, எழுமலை எம்.கல்லுப்பட்டி சாலையில், மாதர் சங்க மாவட்ட தலைவர் முத்துராணி, நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், சேடபட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 61 பேரை எழுமலை போலீசார் கைது செய்தனர்.


Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...