×

சுவாமி சிலைகளை உடைத்தவர் கைது

சுரண்டை, ஜன. 10: சுரண்டை அருகே சுவாமி சிலைகளை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.சுரண்டை அருகே உள்ள கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சந்திரசேகர் (32), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், குடிபோதையில் இங்குள்ள மாடசாமி, ஈஸ்வரி அம்மன் கோயிலில் புகுந்து 2 சுவாமி சிலைகளை உடைத்துள்ளார். அப்பகுதி மக்கள், அவரை கையும் களவுமாக பிடித்து சாம்பவர்வடகரை போலீசில் ஒப்படைத்தனர். எஸ்ஐ சஞ்சய்காந்தி வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்.


Tags : idols ,Swami ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்