நெல்லை, ஜன. 10: இந்திய தேவசபையின் கன்வென்சன் கூட்டம் நெல்லையில் இன்று துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. பாளை மத்திய சிறை எதிரே செயல்படும் காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் இந்திய தேவசபையின் 4 நாள் கன்வென்சன் கூட்டம் இன்று (10ம் தேதி) மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இதில், ‘பலங்கொண்டு திடமாகயிரு’ என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய தேவசபையின் குருவானவர்கள் பேசுகின்றனர். கூட்டத்திற்கு மாநில இயக்குநரான குருவானவர் ஞானதாஸ் தலைமை வகிக்கிறார். குருவானவர்கள் சொர்ணராஜ், நீலகிரி டேவிட் ஸ்டான்லி தேவசெய்தி அளிக்கின்றனர். நாகர்கோவில் பாஸ்டர் ஜான்சாம் ஜாய்சன் துதி ஆராதனை நடத்துகிறார். ஏற்பாடுகளை சாந்திநகர் பாஸ்டர் டைட்டஸ் தலைமையில் பாஸ்டர்கள் ஜெபராஜ், எபனேசர், ஜேக்கப் செய்து வருகின்றனர். இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய தேவசபையின் உறுப்பினர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.