×

கரம்பை மண் கடத்திய 7 டிராக்டர், ஜேசிபி பறிமுதல்

ஏர்வாடி, ஜன. 10:  ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளபதிசமுத்திரம் பகுதியில் கரம்பை மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஏர்வாடி அருகே நல்லபெத்தான்குளத்தில் இருந்து அனுமதியின்றி கரம்பை மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் சிறுமளஞ்சியை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் முத்துராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து போலீசார், நல்லபெத்தான்குளத்திற்கு விரைந்தனர். அங்கு கரம்பை மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர்கள் திருப்பாற்கடல், முருகன், நவமணி, நாகராஜன், சிவராஜா உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 டிராக்டர்கள், ஜேசிபியை பறிமுதல் செய்தனர். நாங்குநேரி தாசில்தார், மேல்விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : JCB ,
× RELATED நெல்லையில் ரூ.2 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு..!!