×

செம்பனார்கோவில் அருகே பரசலூர்-வல்லம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

செம்பனார்கோவில், ஜன.10: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து பரசலூர்-வல்லம் தார்சாலையை சீர்படுத்திதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பரசலூர் அடுத்து கிராமங்களான வல்லம் பகுதியில் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி விவசாய நிலம் நிறைந்த பகுதியாகும்.  இங்கு சாகுபடியான சம்பா, குறுவை, தாளடி என பருவத்திற்கேற்ப விவசாயம் தடையில்லாமல் நடக்கும்.  இப்படிப்பட்ட விவசாய கிராமத்திற்கு விவசாயம் சம்பந்தப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைநெல் போன்ற அனைத்திற்கும் பரசலூர் வந்துதான் செல்ல வேண்டும்.  அங்கு சாகுபடி செய்த நெற்பயிர்களையும், விவசாயிகள் விற்பதற்கு பரசலூர் வந்துதான் மயிலாடுதுறை செல்ல நேரிடும்.  அப்போது அவர்கள் டிராக்டர், மினிலாரி, லாரி போன்ற வாகனங்களின் தான்செயல்ல வேண்டும்.  கடந்த காலங்களில் இப்பகுதி மினி பேருந்து வசதி இருந்து வந்தது.  சாலைகள் மோசமானதால் மினி பஸ் அடிக்கடி பழுதடைந்து பாதியில் நிற்கிறது.

தற்போது மினி பஸ் வசதியும் கிடையாது.  இவர்கள் செம்பனார்கோவில் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 2கி.மீ. சுற்றிதான் வரவேண்டும்.  
கடந்த 2 ஆண்டிற்கும் மேல் இச்சாலையை யாரும் கண்டுகொள்ளுவதும் இல்லை.   இருசக்கர வாகனங்களில் செல்வோர் சீர்குலைந்த சாலையில் அடிக்கடி செல்வதால் பஞ்சர் ஒட்டும் கடைகளுக்கு எடுத்து செல்கின்றனர்.  மேலும் பரசலூர் - வல்லம் செல்லும் வழியில் மஹாராஜபுரம், கடுவெளி என சிறுகிராமமும் இருந்து வருகிறது.  இப்பகுதிக்கு தெருவிளக்குகள் கூட கிடையாது.  பல முன்னேற்றங்கள் அடைந்த காலகட்டத்தில் இன்னும் தார்சாலையில் கூட முன்னேற்றம் இல்லை.  அதனால் இப்பகுதி மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் தங்களது தேவைக்கு பயணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரசலூர் - வல்லம் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விநாயகர் கோயிலில்  நகை, பணம் கொள்ளை

மயிலாடுதுறை ஜன.10: நாகை மாவட்டம் மயிலாடுதுறை வள்ளாலகரம் வெங்கடேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யங்கார் அப்பன் (65) என்பவர் இரவு 10 மணி வரை கோயிலில் இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மார்கழி மாத பூஜைக்காக அப்பகுதியை சோமுபிள்ளை என்பவர் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தார். அப்பொழுது கோயில் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுவற்றில் பதித்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது, மேலும் விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்த வௌ்ளி ஆபரணங்கள் (ஒரு கிலோ எடை) கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிராம மக்களுக்கு தெரியவரவே கோயில் முன் கூடினர். பின்னர் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : road ,Bresalur-Vallam ,Sembamanarko ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி