×

வடவூர் ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

நாகை. ஜன.10: நாகை தெற்கு மாவட்டம் நாகை ஒன்றியம் வடவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பொருளாளர் திருமலைச்சாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்வேளூர் எம்எல்ஏ மதிவாணன் கலந்து கொண்டு ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கேஸ்செந்தில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் எலக்ரிகல்பாலா, டேனியல்சத்தியா, தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் சீனிவாசன், துணைச் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் காமராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், ஜிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,DMK Council ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...