×

படப்பை அருகே பரபரப்பு மர கம்பெனியில் பயங்கர தீ விபத்து

பெரும்புதூர், ஜன.9: படப்பை அருகே மர கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஊழியர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பெரும்புதூர் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் சாம்ஜி (69). அதே பகுதியில் மரத்தில் பேலட் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். சாம்ஜி கம்பெனியை பூட்டிவிட்டு புறப்பட்டார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கம்பெனியின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கம்பெனி காவலாளி, தீயை அணைக்க முயன்றார் முடியவில்லை.தகவலறிந்து பெரும்புதூர், மறைமலைநகர், தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், கம்பெனியில் இருந்த மர பேலட் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : accident ,scene ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...