×

சங்கரா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம், ஜன.9: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.சீனிவாசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வேணுகோபால், நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், நிலத்தடி நீர்வளம் மேம்பட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட செயல்திட்ட அலுவலர் மகேஸ்வரி ஏற்பாடு செய்தார்.

Tags : wave awareness rally ,Sankara University ,
× RELATED சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம்