×

மயங்கி விழுந்து வியாபாரி பலி

திருச்சி, ஜன.9:  திருச்சி பொன்மலை, ஓய்வு ராணுவ காலனியை சேர்ந்தவர் மலர்மன்னன் (55), காய்கறி வியாபாரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் சற்று மனநிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் இரவு தென்னூர் அண்ணா நகர் அருகே சாலையில் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாக தில்லைநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் கிடைத்தது. தொடர்ந்து மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, ஜன.9:  திருச்சி பொன்மலை, ஓய்வு ராணுவ காலனியை சேர்ந்தவர் மலர்மன்னன் (55), காய்கறி வியாபாரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் சற்று மனநிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் இரவு தென்னூர் அண்ணா நகர் அருகே சாலையில் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாக தில்லைநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் கிடைத்தது.

Tags : businessman ,
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது