கும்பகோணம், ஜன. 9: கும்பகோணம் சுந்தரபெருமாள் ஆற்றங்கரையில் இருந்த 2 தேக்கு மரங்களை கடந்த 14ம் தேதி மர்மநபர் வெட்டி கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து ஒன்றிய ஆணையர் பூங்குழலி அளித்த புகாரின்பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் மரத்தை வெட்டி கடத்தியது அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகுருநாதனை கைது செய்தனர்.