×

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

கரூர், ஜன.9: கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டி நரிகட்டியூர் தில்லைநகர் பகுதியில் வசிப்பவர் பதுலாபேகம்(49). இவர் மருந்து வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் பதுலாபேகம் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயின் பறித்துவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து பதுலாபேகம் கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் மோதி வாலிபர் படு காயம்:  கரூர்  க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் சிவசக்தி நகரை சேர்ந்த நடராஜன் மகன்  சுப்பிரமணி (38). டூ வீலரில் கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில்  வந்துள்ளார். அப்போது ராஜபுரம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த  அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த  சுப்பிரமணி நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  

சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலை: அரவக்குறிக்குறிச்சி அடுத்த தடாகோவிலை சேர்ந்தவர் அருண்குமார்.  வியாபாரியான இவரது மனைவி ஜெயபிரியா (30). திருமணமாகி  ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இரட்டை ஆண் குழந்தை பிறந்து ஓரிரு நாட்களில்  இறந்தன. இந்நிலையில் நேற்று காலை கணவர் அருண்குமார், பள்ளப்பட்டி வாரச்சந்தைக்கு காய்கறி வியாபாரம் செய்ய சென்றார். அப்போது ஜெயப்பிரியா தந்தை  சுப்பிரமணி, கதிர்பாளையத்தில் இருந்து மகளை பார்ப்பதற்காக வந்தார். அப்போது வீட்டு கதவு   திறந்த நிலையில் மகள் ஜெயபிரியா மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய  நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் கரூர்  ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது. லாரி திருட்டு: கரூர்  மூக்கணாங்குறிச்சி பகுதி சின்னமூக்கணாங்குறிச்சியை சேர்ந்தவர் வேலுசாமி  (44). இவரது லாரியை கரூர் பைபாஸ் சாலையில் ஒரு  ஓட்டல் அருகே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் ஓட்டல் அருகே நிறுத்தியிருந்த லாரியை காணவில்லை. இதுகுறித்து வேலுசாமி கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா