×

ஓசூர்-தேன்கனிக்கோட்டை இடையே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர், ஜன.9: ஓசூர் ரயில் நிலையம் அருகில் தேன்கனிக்கோட்டை சாலை  குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம் அருகே தேன்கனிக்கோட்டை பிரதான சாலை உள்ளது. இந்த வழியாக கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஒகேனக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிக்கு செல்கிறது. இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறுவதால் சாலைகள் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சாலையில் இருக்கும் குழிகள் தெரியாமல் ேவகமாக வரும் வாகன ஓட்டிகள், குழியில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு ேநரங்களிலேயே அதிக விபத்து நடந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்பை சீரமைக்கவும், பழுதடைந்த சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vehicle drivers ,road ,Dhenkanikottai ,Hosur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...