சாத்தான்குளம், ஜன. 9: தைலாபுரத்தில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
சாத்தான்குளம் அருகே தைலாபுரத்தில் கணேசன் (61) என்பவரது தோட்டத்துக்கு நேற்று காலை சென்ற ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்தது. தகவலறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ஆட்டை உயிருடன் மீட்டனர். விசாரணையில் அந்த ஆடு அதே ஊரைச் சேர்ந்த ருக்மணி க்கு சொந்தமானதும், காட்டு பகுதியில் மேய சென்றபோது தவறிவிழுந்ததும் தெரியவந்தது.