அரூர், ஜன.8: மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பழனிவேல் தலைமை வகித்து, பிளஸ்1, பிளஸ்2 மாணவிகள் 203 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியை மல்லிகா, உதவி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் மற்றும் தாஹிர் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.