×

திரிபுரா சிறுவர்கள் மீட்பு

மதுரை, ஜன. 8: மதுரை அருகே, நாகதீர்த்தத்தில் தனியார் விடுதியில், திரிபுரா மாநிலம் பதயப்பூர் தர்மா நகரை சேர்ந்த முனிராம் சோம்பர்த்தியின் பிள்ளைகள் சோப்ரதி (16), மால்ருங் (13), நேரு (19) ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக தங்கியிருந்தனர். முறையாக அரசு அனுமதி இல்லாத காரணத்தால், இந்த விடுதி தற்போது மூடப்பட்டது. இதனால், இங்கு தங்கியிருந்த 3 சிறுவர்களையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தீர்பாயத்தின் சேர்மன் டாக்டர் விஜய் சரவணன், உறுப்பினர் சாந்தி, சண்முகம் ஆகியோர் மீட்டனர்.
மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தேவையான உதவி மற்றும் புத்தாடைகளை கலெக்டர் நடராஜன் நேற்று வழங்கினார். பின்பு இச்சிறுவர்கள் மதுரை அழகப்பன் நகரில் உள்ள முத்துப்பட்டி குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tripura ,
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...