×

திமுக., சார்பில் நாளை ஊராட்சி சபை கூட்டம்

ஈரோடு, ஜன. 8:   திமுக., சார்பில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறியும் வகையில் ஊராட்சி சபை கூட்டம் ஈரோட்டில் நாளை (9ம் தேதி) நடக்கிறது. இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக., செயலாளர் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்திற்கு ஏற்ப அனைத்து ஊராட்சிகளிலும் திமுக., சார்பில் பொதுமக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடக்கிறது.   இதன்படி ஈரோடு, மொடக்குறிச்சி ஒன்றியங்களில் வருகின்ற 9ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் திமுக., பொருளாளர் துரைமுருகன், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.  9ம் தேதி காலை 8 மணிக்கு மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட லக்காபுரம் ஊராட்சியிலும், 10.30 மணிக்கு கஸ்பாபேட்டை ஊராட்சியிலும் கூட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஈரோடு ஒன்றியத்திற்குட்பட்ட எலவமலை ஊராட்சியிலும், 6 மணிக்கு கூரபாளையம் ஊராட்சியிலும் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,council meeting ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...