×

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சம்மர் பிரண்ட்ஸ் அணி சாம்பியன்

மொடக்குறிச்சி, ஜன. 8: மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈரோடு நடத்திய மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் சம்மர் பிரண்ட்ஸ் அணி  சாம்பியன்பட்டம் பெற்றது.   ஈரோடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிச.21 முதல் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டது. இதில் லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகளாக நடந்தன.  இதில் சம்மர் பிரண்ட்ஸ் அணியும், நந்தாகல்லூரி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.   கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் நந்தாகல்லூரி அணிடாஸ் வென்று முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75ரன்களே எடுத்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய சம்மர் பிரண்ட்ஸ் அணியினர் 15 ஓவர்களின் முடிவில் 2விக்கெட்டுகளை இழந்து 76ரன்கள் எடுத்து 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஈரோடு பேட்மிண்டன் சங்க செயலாளர் சுரேந்திரன் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற சம்மர் பிரண்ட்ஸ் அணியினருக்கு ரூ.30ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையையும் சாம்பியன்பட்டத்தையும் வழங்கி பாராட்டினார்.  

இரண்டாமிடம் பெற்ற நந்தாகல்லூரிக்கு ரூ.20ஆயிரம், சுழற்கோப்பையும், மூன்றாமிடம் பெற்ற ஸ்கைபாய்ஸ் அணியினருக்கு ரூ.15ஆயிரம், சுழற்கோப்பையும், நான்காமிடம் பெற்ற ராயல்சிசி அணியினருக்கு ரூ.7,500ம், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. சிறந்த பேட்ஸ்மேன் விருது சபாரத்தினம் (ஸ்கைபாய்ஸ்), சிறந்த பவுலர் விருது வெங்கடேஸ்வரன் (நந்தாகல்லூரி), சிறந்த ஆல்ரவுண்டர் விருது தீனதயாளு (சம்மர்பிரண்ட்ஸ்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக் அலி வாழ்த்துரை வழங்கினார். சங்கபொருளாளர் அருண் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், சந்துரு, அருள்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Summer champions team champions ,county cricket match ,
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை