×

சிமென்ட் கடையில் ரூ.75ஆயிரம் கொள்ளை

க.பரமத்தி,:  சின்னதாராபுரம் கடைவீதியில் தனியார் சிமென்ட்  கடையில் ரூ.75ஆயிரம்  கொள்ளைடியத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகி ன்றனர்.க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி (54).  சின்னதாராபுரம் கடை வீதியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். கடந்த  29ம்தேதி வழக்கமாக பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் பணத்தை வைத்து பூட்டி  விட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.பின்னர் திரும்ப கடைக்கு  வந்து பார்த்த போது கடையில் பணப்பெட்டி வைத்திருக்கும் இடம் பூட்டு  உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.75ஆயிரம் ரொக்கப் பணத்தை காண வில்லை. இதனால்  அதிர்ச்சியடைந்த பெரியசாமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில்  சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த கடையை  பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம  நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : robberies ,cement shop ,
× RELATED கொள்ளை வழக்கு 4 பேர் கைது