×

கலை பண்பாட்டு மையம் சார்பில் திருவையாறில் மார்கழி இசை விழா

திருவையாறு, ஜன. 8:  கலை பண்பாட்டுத்துறை தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மார்கழி இசை விழா 10, 11ம் தேதிகளில் நடக்கிறது.இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளதாவது: கலை பண்பாட்டுத்துறை தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மார்கழி இசை விழா 10, 11ம் தேதிகளில் நடக்கிறது.
10ம் தேதி மாலை 5 மணிக்கு திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் மங்கள இசை மற்றும் கலைநிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு கரூர் சுவாமிநாதன் குழுவினரின் திருமுறை இசை, 7 மணிக்கு இசைப்பேரொளி சவுமியா குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, 8 மணிக்கு சென்னை பரத் சுந்தர் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு திண்டுக்கல் நாதலய நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி மாலை 5 மணிக்கு கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் குழுவினரின் திருமுறை இசை, 6 மணிக்கு கோவிலடி மத்வபிரசாத் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, 7 மணிக்கு கல்யாணபுரம் சீனிவாசன், திருராமேசுவரம் ராதாகிருஷ்ணன் குழுவினரின் இசைச்சங்கமம், 8 மணிக்கு திருவையாறு ஆடல் வல்லான் நாட்டிய பள்ளியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு குணசேகரன் தெரிவித்துள்ளார். 10, 11ம் தேதிகளில் நடக்கிறது


Tags : Music festival ,Art Culture Center ,
× RELATED சென்னையில் பிப்.5ல் நடைபெறுகிறது இசை விழா: தமிழக அரசு அறிவிப்பு