×

பட்டுக்கோட்டை பகுதியில்அக்டோபரில் செலுத்திய மின்தொகையை டிசம்பர் மாதத்துக்கும் செலுத்த வேண்டும்

பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டை பகுதியில் மின்நுகர்வோர்கள், அக்டோபரில் செலுத்திய மின்தொகையை டிசம்பர் மாதத்துக்கும் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை நகரம், கிழக்கு, மேற்கு, பெருமாள்கோவில், ஆலத்தூர், பள்ளத்தூர், வாட்டாத்திக்கொல்லைக்காடு, அதிராம்பட்டினம், மதுக்கூர் நகரம், புறநகர், வடக்கு மதுக்கூர், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு, பூக்கொல்லை, பேராவூரணி நகரம், புறநகர், நாடியம், பெருமகளூர், குருவிக்கரம்பை பிரிவுகளில் கஜா புயல் காரணமாக இன்னும் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் மின் அளவீடு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மின்நுகர்வோர் கடந்த அக்டோபர் மாதத்தில் செலுத்திய அதே தொகையை டிசம்பர் மாதத்துக்கும் செலுத்த கேட்டு கொள்ளப்படுகிறது. பின்னர் பிப்ரவரி  2019ம் மாதத்தில் அளவீடு எடுக்கும்போது இந்த தொகையை மின்வாரியம், நுகர்வோருக்கு சரி செய்து கொடுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : area ,Pattukkottai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...