×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, ஜன. 8: உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பெயர் தக்கா கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோட்டில் வேகமாக சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சிவகாசியில் இருந்து திருவண்ணாமலைக்கு எம்சாண்ட் மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டிச் சென்ற வில்லிப்புதூர் கூமாபட்டியை சேர்ந்த கணேசன் மகன் பால்பாண்டி(29) என்பவரை கைது செய்தனர்.

Tags : Sandy ,
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...