×

உலக அமைதிவேண்டி ஆன்மிக நடைபயணம்

பண்ருட்டி, ஜன. 7:  பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் உலக அமைதி வேண்டி ஆன்மிக நடைபயணம் நேற்று அதிகாலை துவங்கி சென்றனர். பண்ருட்டி பேருந்து நிலையம் வந்தபோது ஆன்மிக பக்தர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். இந்த ஆன்மிக பயணம் நான்குமுனை சந்திப்பு, காந்திசாலை வழியாக மணிநகர், ஆண்டிகுப்பம், புதுப்பேட்டை சென்று இறுதியில் கோட்லாம்பாக்கம் சுந்தரேஸ்வரர் கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உலக அமைதிக்காக வேண்டிகொண்டனர்.

Tags : World Peace Keeping Spiritual Hiking ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி