×

செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகரில் நகரில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும்

சென்னை, ஜன.8: செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூர், மறைமலைநகரில்  புதிதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டித் தர வேண்டும் என்று சட்டப் பேரவையில் வரலட்சுமி (திமுக) பேசினார். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது செங்கப்பட்டு வரலட்சுமி (திமுக) கூறியதாவது: செங்கல்பட்டு நகராட்சியில் ஜே. சி.கே. நகரில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, காட்டாங்கொளத்தூர்  வல்லம், கல்வாய், குமிழி ஊராட்சிகளில் தலா 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, மறைமலை நகர் 15ம் வார்டு, பனங்காட்டூரில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து தர அரசு முன்வருமா?

அமைச்சர் வேலுமணி: ஒரு இடத்தில் நீர் தேக்கத் தொட்டி கட்டும் போது நீர் ஆதாரம், மக்கள் தொகை ஆகியவை கணக்கிடப்படும். எனவே தண்ணீர் தொட்டி ஏதாவது பழுது அடைந்திருந்தால் அது ஆய்வு செய்யப்படும். இந்த ஆட்சியில் 2974 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் எங்கெங்கு அவசியமோ அங்கு நிச்சயம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chengalpattu ,town ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...