×

கல்லூரி விடுதியில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு சாவு

மதுராந்தகம், ஜன.8: விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தேஸ்வர் அரவிந்த் (19). இவர், மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி, 3ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக அனைத்து மாணவர்களும் வந்தனர். ஆனால் தேஸ்வர் மட்டும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்களும் விடுதி ஊழியர்களும் அவரை தேடியபோது விடுதி வளாகத்தில் ஒரு அறையில ்தேஸ்வர் அரவிந்த் தூக்கில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தேஸ்வர் அரவிந்த்தின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக தேஸ்வர் அரவிந்த்தின் பெற்றோர் படாளம் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,student ,College Hospital Medical College ,
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...