×

அம்பையில் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு மர்ம நபருக்கு வலை

அம்பை, ஜன. 4: அம்பையில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை சரமாரி வெட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பை அருகே பிரம்மதேசம் ஆத்தியடி தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ஆறுமுகம்(45). இவர் அம்பை - தென்காசி பிரதான சாலையில் மன்னார்கோவில் விலக்கு அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். ேநற்று இவர் பங்கிலிருந்து வழக்கம் போல் காரில் வந்து அம்பை ரயில்வே கேட் அருகில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்மநபர் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தகவலறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்தில் மர்மநபர் விட்டுச் சென்ற அரிவாளை கைப்பற்றி அவரை தேடி வருகின்றனர். ஆறுமுகம் ஏதற்காக வெட்டப்பட்டார். இவருக்கும் மர்ம நபருக்கும் முன் விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : petrol punk owner ,
× RELATED விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க்...