×

இடத்தகராறில் முன்விரோதம் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயற்சி அதிமுக பிரமுகருக்கு வலை

திருவெறும்பூர்,  ஜன.4:  திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அயன்புதூரில் கூலி தொழிலாளியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட அதிமுக கிளைசெயலாளரை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே உள்ள அயன்புதுரை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் பாலன் (எ) பாலகிருஷ்ணன் (35). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கர்ணன் (55)என்பவருக்கும் இடையே இட தகராறு இருந்து வருகிறது  இந்நிலையில் பாலகிருஷ்ணனை முன்விரோதம் காரணமாக நேற்று கர்ணனும், அவரது  தம்பி குத்தான் என்பவரும் சேர்ந்து  தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் கர்ணன் மற்றும் குத்தான் மீது  கொலை முயற்சி வழக்குப்பதிந்து செய்து  குத்தானை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள கர்ணனை தேடி வருகின்றனர்.

Tags : laborer ,area ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...