×

பச்சை பட்டாணி வடை

செய்முறை:  

முதலில் காய்ந்த பட்டாணியை சுடுநீரில் போட்டு மூடி வைத்து குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த பட்டாணியை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பொடியை அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.  

பின் சிறிது சிறிதாக எடுத்து, தட்டையாக தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பட்டாணி வடை தயார்.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்