×

சுள்ளிமேடு கழிப்பறையை சுத்தம் செய்ய கோரிக்கை

மொடக்குறிச்சி, ஜன. 4: அவல்பூந்துறை பேரூராட்சி 8வது வார்டான சுள்ளிமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் வசதிக்காக அருகில் உள்ள மயானப்பகுதியில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பறையின் கழிவுநீர் மயான பகுதியில் திறந்த வெளியில் செல்கிறது. கழிப்பறைக்கு முன்பு தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.அதேபோல் ஆற்று தண்ணீருக்கும், போர் தண்ணீருக்கும் ஒரே பைப்லைன் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியில் சுத்தம் செய்யாததாலும், கழிப்பறை தண்ணீர் திறந்த வெளியில் செல்வதாலும் அடிக்கடி மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது.
ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவல்பூந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் அப் பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.


Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...