×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சின்னசேலம், ஜன. 4: சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், மரவாநத்தம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சுமார் ஒரு யூனிட் மணல் இருப்பது உறுதியானது. இதையடுத்து டிராக்டரை ஓட்டி வந்த மரவாநத்தம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம் கூறுகையில், சின்னசேலம் காவல் எல்லை பகுதியில் மண், மணல், கிராவல் மண் அனுமதியின்றி அள்ளிச்சென்றால் கனிமவள பாதுகாப்பு மற்றும் தடுப்பு சட்டத்தின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டிரைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை