×

நீடாமங்கலத்திலிருந்து ரயிலில் 1250 டன் அரிசி தூத்துக்குடிக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், ஜன.4:     திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா மற்றும் தாளடியில்   நிலத்தடி நீரை பயன்படுத்தி நெற்பயிர் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. இந்த சன்ன ரக நெல்களை மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதியில்  கொள்முதல் செய்து  தனியார் அரவை முகவர்கள் மூலம் அரவை செய்து அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி மற்றும் மன்னார்குடி வட்ட கிடங்கு  ஆகிய குடோன்களில் சேமித்து வைத்திருந்த சன்னரக புழுங்கல் அரிசி மூட்டைகள்  நேற்று 100 லாரிகளில் 1,250 டன் புழுங்கல் சன்ன ரக அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, 21 சரக்கு வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றி பொது விநியோக திட்டத்திற்காக தூத்துக்குடி அனுப்பி வைத்தனர்.

Tags : Thoothukudi ,Nedumangalam ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...