×

திருத்துறைப்பூண்டி பகுதியில் 3 லாரிகளில் 6 பேட்டரி திருட்டு

திருத்துறைப்பூண்டி, ஜன.4:   திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் பேட்டரி திருட்டு போய் வருவதாக புகார் இருந்து வந்தது.  இதனை கண்டுபிடிப்பதற்கான திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு கிடையாது. இதனால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. திருத்துறைப்பூண்டி வேதை சாலையிலுள்ள தாலுகா லாரி உரிமையாளர்கள் நலசங்க அலுவலக வளாகத்தில் எப்போதுமே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் ஏற்கனவே பலமுறை பேட்டரி திருட்டுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாலுகா லாரி உரிமையாளர்கள் நலச்சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியன், முத்து, அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேருடைய லாரிகளிலிருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 6 புதிய பேட்டரிகள் திருட்டு போய் உள்ளது. இது குறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நலசங்க நிர்வாகிகள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : area ,Thiruthuraipondi ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது