×

ஊதிய குறைப்பை கைவிடக் கோரி மின்ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்

காரைக்கால், ஜன.4: மின்துறை ஊழியர்கள் பெறும் ஊதியத்தை  குறைக்கும் எண்ணத்தை கைவிடகோரி காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மின்துறை ஊழியர்கள் இதுவரை பெற்றுக்கொண்டிருக்கும் ஊதியத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது. ஒரு நபர் குழு அடிப்படையிலான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.  நிர்வாகம் உறுதி அளித்தபடி அனைத்து காலி பணியிடங்களையும்  உடனே பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும். தகுதியுள்ள  விடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியினை தனியாருக்கு தாரைவார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

விதிகளுக்கு புறம்பாக பணியமர்த்தப்பட்ட 8 கட்டுமான உதவியாளர்களின் பணிகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு நேற்று தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மின் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் பழனி, மற்றும் வேல்மயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் நாஜிம் ஆதரவு தெரிவித்தார்.

Tags : abolition ,
× RELATED சனாதன பேச்சு விவகாரத்தில்...