பாபநாசம், ஜன. 4: தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ளது எடக்குடி. இந்த பகுதி பொதுமக்கள், வெண்ணாற்றின் கரையை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். எனவே எடக்குடி பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனி மயானம் கட்டித்தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எடக்குடி பகுதி பொதுமக்களிடம் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், மெலட்டூர் ஆர்ஐ கலையரசி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எடக்குடியில் மயானத்துக்காக தனி இடம் ஒதுக்கீடு செய்வதாக பொதுமக்களிடம் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.