×

கரூர் மாவட்டத்தில் திமுக உறுப்பினர் சீட்டு கிடைக்காதவர்கள் மனு அளிக்க இன்றும், நாளையும் அவகாசம்

கரூர், ஜன.4: கரூர் மாவட்டத்தில் திமுக உறுப்பினர் சீட்டு கிடைக்காதவர்கள் மனு அளிக்க இன்றும், நாளையும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக 15வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை தலைமை நிலைய பிரதிநிதி குத்தாலம் கல்யாணம் ஊராட்சி, வார்டு கிளை வாரியாக அனைவருக்கும் வழங்கியுள்ளார். நிறைய பேர் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். தலைமை நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்ட இன்வாய்ஸ் படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் தவறுதலாகவும், பழைய அட்டை, 2 இடத்தில் பதிவு, ஊராட்சி உறுப்பினர் பெயர் மாறியது என கிடைக்காமல் உள்ளது. இது போன்ற குறைபாடுகளை நீக்கி உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெறவதற்கு மாவட்டம் தலைமை நிலையத்தில் எடுத்துக் கூறி அனைவருக்கும் பெற்றுத்தர முன் வந்துள்ளது.

இதன்படி 2 நாட்கள் 4 மற்றும் 5ம்தேதி (இன்றும், நாளையும்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கரூர் கலைஞர் அறிவாலயத்திலோ அல்லது அந்தந்த ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் இடத்திலோ தலைமை நிலையத்தால் வழங்கப்பட்டுள்ள இன்வாய்ஸ் காப்பியையும், விடுபட்டு போனவரது வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு வந்து உறுப்பினர் உரிமை சீட்டு பெறலாம் என மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Karur district ,petitioners ,DMK ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...