×

புத்தாண்டு பரிசு தகராறில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஜன.4: புத்தாண்டு பரிசு தரமறுத்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் கோடி தற்கொலைக்கு முயற்சித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனாராம்.இந்நிலையில் ஆங்கிலப்புத்தாண்டு அன்று மாணவரிடம் பரிசு பொருள் வாங்கித்தருமாறு சிறுமி கேட்டிருந்தாராம். அதற்கு அவர் வாங்கி தரமுடியாது எனக்கூறியதாக தெரிகிறது.இதையடுத்து, நேற்று அதிகாலை இருவரும் ஊருக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிறுமி கோபித்துக்கொண்டு அருகே இருந்த விஷத்தழையை அரைத்து குடித்துள்ளார்.

அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காதலனும் அந்த விஷத்தை குடித்துள்ளார். இதில் இருவரும் சிறிதுநேரத்தில் நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Love pair ,gift scandal ,
× RELATED கேரளாவில் 3 வாரங்களாக பழங்களை மட்டுமே...