×

மதுராந்தகம் மோச்சேரி கிராமத்தில் திமுக எம்எல்ஏ ஆய்வு

மதுராந்தகம், ஜன.4: மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரி அமைக்கப்பட்டுள்ள சாலையோர கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அப்பகுதியில் நேற்றுமுன்தினம் திமுக எம்எல்ஏ  புகழேந்தி ஆய்வு செய்தார்.
மோச்சேரி பகுதியில் சாலைகளின் இரு புறங்களில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள இந்த கால்வாய்கள் முறையான திட்டமிடல் இன்றி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.இதனால், இந்த கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படும் கழிவுநீர் மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் 3 பேருக்கு சொந்தமான நிலங்களில் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலைமை  உள்ளது.

குறிப்பாக இதே நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுக்கும். இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மதுராந்தகம் திமுக எம்எல்ஏ புகழேந்தி  குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டார்.
அப்போது அவருடன் மதுராந்தகம் நகர திமுக செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ புகழேந்தி கூறுகையில், இது ஒரு மோசமான நிலைமையாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Tags : DMK MLA ,village ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...